இந்தியா

சசிகலா மறுசீராய்வு மனு 22ம் தேதி விசாரணை

சசிகலா மறுசீராய்வு மனு 22ம் தேதி விசாரணை

webteam

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்த சசியின் மறுசீராய்வு மனு வரும் 22ம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு வரும் 22ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. முன்னதாக 2ம் தேதி சீராய்வு மனு விசாரணைக்கு இருந்தது. ஆனால் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் விசாரணைக் குழுவில் இருந்து விலகியதால் பட்டியலில் இருந்து சசிகலாவின் மனு நீக்கப்பட்டது.

தற்போது ரோஹின்டன் நாரிமனுக்கு மாற்றாக நீதிபதி பாப்டே விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப் படே, அமிதவராய் அமர்வு விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.