இந்தியா

சிவசேனாவில் சேர்ந்தார் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர்!

webteam

பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா, சிவசேனா கட்சியில் நேற்று இணைந்தார்.

மகாராஷ்ட்ராவில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதோடு பிரபலங்களை, தங்கள் கட்சிக்குள்ளும் இழுத்து வருகின்றன. 

இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் குர்மீத் சிங் என்கிற சேரா, சிவசேனா கட்சியில் சேர்ந்துள்ளார். மும்பையில் பிரபலமான சேரா, பல வருடங்களாக சல்மான் கானின் பாதுகாவலராக இருக்கிறார். சல்மான் கான் எங்கு சென்றாலும் சேராவையும் அவருடன் பார்க்க முடியும்.

இவர், கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அவர் மகனும் யுவசேனா தலைவருமான ஆதித்யா தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இதை சிவசேனா கட்சித் தெரிவித்துள்ளது.