பெட்ரோல் விலை ஏற்றம் மக்களின் வாகனத் தேர்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு இருச்சக்கர வாகனங்களில் 6.11% மட்டுமே இருந்த மின்சார வாகன விற்பனை, இப்போது 9.25% ஆக உயர்ந்துள்ளது; வருங்காலத்தில் இந்த விகிதம் மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். மின்சார வாகனங்கள் வாங்குவது தொடர்பாக விசாரிக்க வருபவர்கள் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதாக வாகன விற்பனையாள்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்த இருச்சக்கர வாகன விற்பனையில் கடந்தாண்டு 6.11% ஆக இருந்த மின்சார இருச்சக்கர வாகனங்களின் பங்கு தற்போது 9.25%ஆக அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் உயரும் என்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது