தேவி பாரதி - சாகித்ய அகாடமி விருது
தேவி பாரதி - சாகித்ய அகாடமி விருது PT
இந்தியா

’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

PT WEB

தமிழில் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. அதில் தமிழில் தேவிபாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே நிழலின் தனிமை நொய்யல் நட்ராஜ் மகராஜ் போன்ற புதினங்களை வெளியிட்டு உள்ளார்.