சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காட்டுவார். அன்று சிறப்பு பூஜைகள் நடக்காது. மறுநாள் அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
பின்னர், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ம் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக, ஜூன் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.