இந்தியா

மகரவிளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

மகரவிளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

EllusamyKarthik

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நாளை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஐயப்பன் கோயிலில் மீண்டும் நாளை முதல் வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

டிசம்பர் 30-ஆம் தேதியும், வரும் ஜனவரி 20-ஆம் தேதியும் பந்தளம் அரண்மனை குடும்பத்தினரின் ஆச்சார வழிபாடுகள் மற்றும் சடங்குகள் இருப்பதால் பிறருக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை. தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசன நிகழ்வு நடைபெற உள்ளது.

மகரவிளக்கு பூஜை காலம் தொடங்கியதையொட்டி ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.