இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் எப்போது?

webteam

மாதாந்திர பூஜைக்காக வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல் பகுதியில் உள்ள நேரடி முன்பதிவு மையங்களில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.

மண்டல பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.