இந்தியா

'ஆர்.எஸ்.எஸ். கலாசாரத்தை பள்ளிகள் மூலமாக நுழைக்கும் பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு

JustinDurai

ஆர்.எஸ்.எஸ். கலாசாரத்தை பள்ளிகள் மூலமாக புதுச்சேரியில் நுழைப்பதற்கான வேலையில் பாஜக மறைமுகமாக ஈடுபடுவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அரியாங்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று பேசியிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஹிஜாப் சர்ச்சை: 'எங்கள் வீட்டுப் பிரச்னையில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம்' -ஒவைசி அதிரடி