இந்தியா

சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

webteam

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. 

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மங்களூரு அருகிலுள்ள குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் உத்தரகன்னட மாவட்டம் எல்லாபூர் அருகில் உள்ள அரபைலு கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. 

இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. அந்தக் காரில் பயணித்த 3 குழந்தைகள், 3 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லாரியில் இருந்த 2 பேர் சாலையை கடந்து கொண்டிருந்த 2 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் எல்லாபுரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் முதல்கட்ட விசாரணை தொடங்கி உள்ளனர்.