கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் அறிகுறி இருந்தால் அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், நெகட்டிவ் என வந்தாலும் அவர்களுக்கு மறுபரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில், ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆர்டி-பிசிஆர் மூலம் சோதனை செய்து பாஸிட்டிவ் எதுவும் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பாசிட்டிவ் நோயாளிகளை தவறவிடவில்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தவறாக நெகட்டிவ் என அனுப்பப்பட்டவர்களை கண்டறிந்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழுவை நியமித்து கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.