இந்தியா

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

Rasus

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட 112  இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுக்காக வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தீர்மானம் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்ற நிலையில் தற்போது தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.