இந்தியா

தேர்தலில் தோல்வியை சந்திப்பவர்கள் மின்னணு இயந்திரங்கள் மீது புகார்- தேர்தல் ஆணையர்

webteam

தேர்தலில் தோல்வியை சந்திக்கும் அரசியல் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது புகார் தெரிவிப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஓம் பிரகாஷ் ராவத், தேர்தலில் தோல்வியுறும் அரசியல் கட்சிகள் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறி வருவதாக தெரிவித்தார். உண்மையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த கோளாறும் இல்லை என்று கூறிய அவர், சந்தேகத்தை போக்கும் வகையிலேயே வாக்கு ஒப்புகைச்சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.