இந்தியா

வீட்டிலிருந்து வேலை செய்யும் நபரா நீங்கள்..!: இதோ ‘ஜியோ’வின் பிரத்யேக ஆஃபர்

webteam

கொரோனா வைரஸ் எதிரொலியால் வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு பிரத்யேக ஆஃபர் ஒன்றை ஜியோ அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ கடந்துவிட்டது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் மக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19 மாநிலங்களை முடக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலம் பணிபுரியும் பணியாளர்களை கவரும் வகையில் ஒரு ஆஃபரை ஜியோ வெளியிட்டுள்ளது. ‘வொர்ட் ஃப்ரம் ஹோம்’ (வீட்டிலிருந்து பணி புரிதல்) என அந்த ஆஃபருக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ரூ.251க்கு ரிசார்ஜ் செய்தால் 51 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி வரை மொத்தம் 102 ஜிபி டேட்டா சேவைவழங்கப்படும். அதேசமயம் இந்த பேக்கேஜ் மூலம் போன் அழைப்புகள் மேற்கொள்ளவோ ? அல்லது மெசெஜ்கள் அனுப்பவோ ? முடியாது. இந்த ஆஃபர் முற்றிலும் டேட்டா தேவைக்கானது மட்டுமே.