10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு டெல்லி முதலமைச்சரை பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா இன்று நண்பகலில் பதவியேற்க உள்ளார்.டெல்லியில் 4ஆவது பெண் முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடந்த 17 ஆம் தேதி பாஜக எம் எல் ஏக்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கட்சியின் மாநில தலைவரான வீரேந்த்திர சச்தேவா டெல்லி முதல்வர் தேர்வு தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லி முதல்வர் பட்டியலில், அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா பெயரும், ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோரது பெயரும் இடம்பெற்று இருந்தது.
மேலும், நேற்று இரவு பாஜக எம் எல் ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவின் 48 எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர். தொடந்து இந்த கூட்டத்தில், முதல் முறையாக எம் எல் ஏவாக தேர்வாகியுள்ள ரேகா குப்தா என்ற பெண் எம்எல்ஏ டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று நண்பகல் 12.45 மணிக்கு டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா.
இவருடன், துணை முதல்வர் -- பிரவேஷ் வர்மா
அமைச்சர்கள் : மன்ஜிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட் . பங்கஜ் குமார் சிங் , கபில் மிஸ்ரா , ரவீந்தர் சிங் இந்ராஜ் அமைச்சர்களும்,
டில்லி சட்டசபை புதிய சபாநாயகர் -- விஜேந்திர குப்தா.
பதவியேற்ற இருக்கிறார்கள்.
இதனையொட்டி விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு வெளியில் மேளதாளங்களுடன் பாஜகவினர் வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால், ராம்லீலா மைதானத்தை சுற்றி 5000 காவல்துறையினர், டுதலாக பாதுகாப்பு பிரிவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி ,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக தலைவர் நட்டா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் , தலைவர்கள் உள்ளிட்டோ வருகை தற்கின்றனர். தவிர , ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் , விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர். திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 50 சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட 1லட்சம் பேர் வரை பதவியேற்பு விழாவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க ரேகா குப்தா உரிமைக் கோரினார். இதனிடையே, டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவிற்கு அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.