ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து twitter page
இந்தியா

தொடரும் ரயில் விபத்துகள்.. பணியாளர் பற்றாக்குறையால் விபத்து ஏற்படுகிறதா? - விரிவான தகவல்

PT WEB

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ரயில் விபத்தில் 275 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ரயில்வே பணியாளர் பற்றாக்குறை, ஒடிசா ரயில் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த ஒரு செய்தியை இந்த வீடியோவில் காணலாம்.