இந்தியா

பூகம்பத்தைக் கிளப்பும் போதைப்பொருள் விவகாரம்: விசாரணை வளையத்தில் ரகுல் ப்ரீத் சிங்

webteam

பாலிவுட் படவுலகில் போதைப்பொருள் பழக்கம் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் விசாரணை வளையத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரியா சக்கரவர்த்தி அளித்துள்ள இருபது பக்க விளக்கத்தில் 25 பாலிவுட் படவுலகப் பிரபலங்களின் பெயரை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர்கள், இயக்குநர்கள், காஸ்டிங் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்கியுள்ள அந்தப் பட்டியலில் சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சிமோன் கம்பாட்டா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நடிகை ரியா சக்கரவர்த்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் ரகுல் ப்ரீத் சிங் போதைப் பொருள் உட்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது

சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்திருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். மேலும் சிவகார்த்திகேயனும் அயலான் உள்பட சில பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.