இந்தியா

தபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி

Rasus

தபால் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே தபால் தேர்வு குறித்து ரவிசங்கர் பிரசாத் நாளை விளக்கம் அளிப்பதாக உறுதி அளித்தள்ளார் என மாநிலங்களவை துணைத் தலைவர் தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்காத அதிமுக எம்.பி.க்கள் தபால் தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் எனக் கூறி மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.