இந்தியா

ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்

Veeramani

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, அதன் மறுசீரமைப்பிற்கு உரிய செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதுவரை, அவர் தனது மற்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பார். நமது மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த்!என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.