இந்தியா

பொதுமக்கள் பணம் பலவந்தமாக பறிக்கப்படுகிறது: ராகுல் காந்தி

கலிலுல்லா

பெட்ரோல் விலை விஷயத்தில் பொதுமக்களின் பணம் பலவந்தமாக பறிக்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல் விலை, விமானங்களுக்கான எரிபொருளை விட அதிக விலையில் விற்கப்படுவது குறித்த ஊடக செய்தியை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, இது தீவிரமான பிரச்னை என்றும், தேர்தலுக்கு முன்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஹவாய் சப்பல் அணிபவர்கள் கூட விமானத்தில் பறக்கிறார்கள் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், சாலையில் கூட செல்ல முடியாத நிலை இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.