இந்தியா

ராஜீவ் காந்தி நினைவுநாள்: ராகுல் காந்தி அஞ்சலி

JustinDurai

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்கு வந்த ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள அவரது வீர் பூமி நினைவிடத்தில், ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.