இந்தியா

காங். நிர்வாகிகளுக்கு இன்று டின்னர்: ராகுல் காந்தி அழைப்பு!

webteam

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு இன்று இரவு விருந்து வைக்கிறார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் ராகுல் காந்தி. இந்நிலையில், கட்சியைப் பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, கட்சியின் நிறை குறைகள், இழந்த செல்வாக்கை எவ்வாறு மீட்டெடுப்பது உள்ளிட்டவை குறித்து மூத்த நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிய இருக்கிறார். இதற்காக காங்கிரஸ் எம்பிக்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்களை டெல்லி அழைத்துள்ளார்.

அவர்களுக்கு இன்றிரவு விருந்து கொடுக்கிறார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த விருந்து நடக்கிறது. இதில் சோனியா காந்தியும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று தெரிகிறது.