பிரதமர் மோடி  - பிரதமர் மோடி
பிரதமர் மோடி - பிரதமர் மோடி  முகநூல்
இந்தியா

“பிரதமர் மேடையிலேயே அழக்கூடிய நிலையும் வரலாம்” - ராகுல் காந்தி பேச்சு!

PT WEB

கர்நாடக மாநிலத்தில் 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் 14 தொகுதிகளில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பரப்புரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விஜயபுராவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

ராகுல் காந்தி

அப்போது தனது உரையில், “தேவையற்ற விஷயங்களை பேசி முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி வருகிறார் பிரதமர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வறுமை ஒழிப்பு குறித்து பிரதமர் பேசுவதே இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி விலைவாசியை குறைக்க முடியும்.

நாட்டில் உள்ள ஏழைகளிடம் பணத்தை பறித்து தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு பிரதமர் தந்து வருகிறார் பிரதமர். நாட்டில் உள்ள ஒரு சதவீதம் பேரிடம் 40% சொத்துகள் குவிந்து கிடக்கிறது. பணக்காரர்களிடம் குவிந்துள்ள பணத்தை திரும்பப்பெற்று ஏழைகளுக்கே திரும்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது” என்று ராகுல்குறிப்பிட்டார்.