இந்தியா

ட்ரம்ப்புக்கு மோடியின் அரவணைப்பு தேவை: ராகுல் காந்தி கிண்டல்

webteam

அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே உண்மையான உறவு தொடங்கியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், இந்திய அமெரிக்க உறவு குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை ஆரத் தழுவ வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றபோது ட்ரம்ப்பும் மோடியும் அரவணைத்துக் கொண்டதை நினைவுகூர்ந்து இருநாட்டு உறவுகளுடன் ஒப்பிட்டு ராகுல் விமர்சித்துள்ளார்.