இந்தியா

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!

EllusamyKarthik

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 41 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளுடன் தொடர்பில் இருந்த சக கைதிகள் மற்றும் சிறை வார்டன்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறைச்சாலை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்பு இருந்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க உள்ளதாக அரசு தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. 

சிறைச்சாலையில் உள்ள தண்டனை கைதிகள் 350 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் விசாரணை கைதிகள் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.