இந்தியா

“பெரும்பான்மையை நிரூபியுங்கள்”- ஆளுநர் தமிழிசையின் உத்தரவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன?

kaleelrahman

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சியின் பெரும்பான்மையை வரும் 22ஆம் தேதி பேரவையை கூட்டி நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.


1. பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே பேரவை கூட்டப்பட வேண்டும். 


2. வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் கைகளை தூக்கித்தான் வாக்களிக்க வேண்டும்.


3. பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.


4. இந்த நடவடிக்கைகளின் முடிவுகளை அன்றைய (22.02.21) தினம் மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும்.


5. எந்த நிலையிலும் பேரவை அலுவலை ஒத்தி வைக்கவோ காலதாமதம் செய்யவோ, முடக்கவோ கூடாது.


5. அமைதியாக பேரவையை நடத்தி முடிக்க பேரவை செயலர் உறுதி படுத்த வேண்டும்.


    உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.