இந்தியா

புதுச்சேரியில் கல்லூரிக் கட்டணம் ரத்து : யாருக்கெல்லாம் தெரியுமா?

webteam

புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்திற்கு ஆளுநர் கிரண் பேடி வராததால், 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நாராயணசாமி, புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அனைத்து கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவச விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் அரசுப் பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இணையதளம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றார்.