இந்தியா

புதுச்சேரி: கோமாரியால் உயிரிழந்த கன்றுகள்: சட்டமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்

kaleelrahman

புதுச்சேரி மருத்துவமனைகளில் மருந்து இல்லாததால் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3 கன்றுக் குட்டிகளுடன் சட்டமன்றம் முன்பு இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் புதுச்சேரியில் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதால். அதை தடுக்க ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்யும் ராஜ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த மூன்று பெண் கன்று குட்டிகளுடன் சட்டமன்றம் வாயில் முன்பு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.