accutse
accutse pt desk
இந்தியா

பார்க் செய்த பைக்கை லாவகமாக களவாடிய போதை ஆசாமி: ஸ்வீட் வாங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

webteam

புதுச்சேரி உழவர்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (28), இவர், லாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு இனிப்பகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற இவர், சாவியுடன் வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றுள்ளார்.

இதையடுத்து இனிப்பு வாங்கிக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் மது போதையில் ஸ்ரீதரின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற போதை ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.