இந்தியா

புதுச்சேரி: சாலையில் சென்ற சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

webteam

புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி நகரின் மையப்பகுதியான புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை இந்திராகாந்தி சதுக்கம் அருகே சொகுசு கார் ஒன்று வில்லியனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது, அப்போது காரின் முன்பக்க இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியதை அடுத்து ஒட்டுனர் காரை சாலையில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.

இதையடுத்து திடீரென தீப்பற்றிய கார் மள மளவென எரியத் தொடங்கியதுஇ உடனே அருகில் இருந்நவர்கள் தீயணைப்பு துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சாலையில் இருந்த காரை அப்புறப்படுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வுpசாரணையில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார் ரெயின்போ நகர் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் விஷ்ணு வரதன் என்பவருக்குச் சொந்தமானது என்றும் காரை வில்லியனூரில் சர்வீஸ் செய்வதற்காக அவருடைய ஓட்டுநர் ஜீவா எடுத்துச் சென்ற போது பேட்டரியில் கசிவு ஏற்பட்டு கார் தீப்பற்றி ஏரிந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனால் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.