இந்தியா

புதுச்சேரி: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தம்பதியர் உட்பட 22 பேர் கைது

webteam

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய தம்பதியர் உட்பட 27 மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி கோரிமேடு மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது கடலூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் அவரது மனைவி உமாவும் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பாலாஜி மற்றும் அங்கு இருந்த வாடிக்கையாளரான புதுவையைச் சேர்ந்த பச்சையப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பாலாஜியும் அவரது மனைவியும் சிறுமியை 20 வயது கல்லூரி மாணவி எனக் கூறி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி உள்ளனர். இதுவரை 25 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தம்பதியினர் உட்பட 27 பேர் மீது போலீசார் போக்சேர் வழக்குப் பதிவு செய்து 22 பேரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உமா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.