இந்தியா

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!

Sinekadhara

மாநிலங்களவை தேர்தலுக்கான 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீட்டித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர்களை தேர்வுசெய்ய அஇஅதிமுகவின் உயர்நிலை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் 2 உறுப்பினர்கள் தேர்வாக உள்ள நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம் எல் ஏக்கள் செம்மலை, இன்பதுரை, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

தென் தமிழகத்திற்கு இம்முறை முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். சமுதாய அடிப்படையில் இந்த முறை வேட்பாளர்கள் தேர்தெடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை இறுதி செய்ய தயாராக இருந்தாலும் தற்போது வரை ஓபிஎஸ் இறுதி செய்யாமல் உள்ளதால் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது.