இந்தியா

பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் - கிராம மக்கள் அதிர்ச்சி

webteam

உத்தரப்பிரதேசத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியபோது பிடிபட்டுள்ளார். 

பதாயூன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியுள்ளார். இதை அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பள்ளிக்குச் சென்ற காவல்துறையினர் தலைமை ஆசிரியர் மது அருந்திவிட்டு நிலைதடுமாறி நடந்து வந்ததை கண்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.