இந்தியா

பஞ்சாப்பில் பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு - விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைப்பு

Veeramani

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான இந்தக் குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி,சண்டிகர் டிஜிபி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. பிரதமர் மோடி பஞ்சாப் சென்றிருந்தபோது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.