இந்தியா

மான் கீ பாத் மூலம் நாட்டு மக்களிடையே இன்று பேசவுள்ள பிரதமர் மோடி!!

webteam

மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே மான் கீ பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தந்த மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்று என்பதால் காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில் அது குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.