இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையிலிருந்து எப்போது டிஸ்சார்ஜ்? குஜராத் அரசு தகவல்

webteam

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஜூன் மாதம் தனது 99-வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலம் தேறிவருகிறார் என்று மருத்துவமனை தரப்பு தெரிவித்தது. அவர் உடல்நலம் சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என குஜராத் அரசு இன்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக “ஹீராபாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரது உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது. நேற்று இரவு முதல் அவருக்கு உணவுகள் வழங்க தொடங்கி விட்டோம்” என குஜராத் முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.