இந்தியா

ஹிமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸஸுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி

webteam

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக பிரதமர் மோடியின் கான்வே நிறுத்தப்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துளளது. இந்நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சியை தலைவர்கள் இறுதி கட்ட பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி, இன்றைய தினம் இமாச்சல் பிரதேச மாநிலம் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தடைந்தார். பிறகு சாலை வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பிரதமர் செல்லும் காரின் வழியே வந்தது. இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரின் கான்வாய் வாகனத்தை சில நிமிடங்கள் நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்டனர்.

அப்போது பிரதமரை வரவேற்க கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஆம்புலன்ஸ் கடந்து சென்ற பிறகு பிரதமரின் கான்வாய் மீண்டும் புறப்பட்டு சென்றது. 

- நிரஞ்சன்