இந்தியா

தேசிய அறிவியல் தினம்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Sinekadhara

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நாட்டின் விஞ்ஞானிகளுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், அறிவியல் ஆற்றலின் துணைகொண்டு மனிதர்கள் முன்னேறுவதற்கான உறுதிப்பாட்டை விஞ்ஞானிகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தைகள் மனதில் விஞ்ஞானத்தின் மீதான ஆர்வத்தை ஒவ்வொரு பெற்றோரும் தூண்ட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். நோபல் பரிசு வென்ற இந்திய விஞ்ஞானி சர் சி.வி. ராமன் கண்டுபிடிப்புகளை போற்றும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.