இந்தியா

"குடியரசுத் தலைவரின் உடல்நிலையில் முன்னேற்றம்"- குடியரசுத் தலைவர் மாளிகை

Rasus

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதய கோளாறு காரணமாக கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் தற்போது சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளாகவும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.