இந்தியா

விவிஐபிக்கள் வருகைக்காக போக்குவரத்தை வெகுநேரம் நிறுத்தக்கூடாது- குடியரசுத் தலைவர் அறிவுரை

JustinDurai
மிக முக்கிய பிரமுகர்கள் வருகைக்காக போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தக்கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தாம் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், நீண்ட நேரத்திற்கு முன்பே போக்குவரத்து நிறுத்தப்படுவதை கவனித்துள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது வேதனையாக உள்ளது என கூறினார்.