இந்தியா

விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

Sinekadhara

இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

விங் கமாண்டராக இருந்தபோது புரிந்த வீரதீர செயல்களுக்காக இந்தியாவின் 3ஆவது உயரிய பாதுகாப்புத்துறை விருதான வீர் சக்ரா விருதை அபிநந்தனுக்கு  குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவித்தார். விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.