இந்தியா

தூய்மையைப் பராமரிக்க பணிபுரிய வேண்டும்: குடியரசுத் தலைவர் காந்தி ஜெயந்தி வாழ்த்து

webteam

தூய்மையைப் பராமரிக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணல் காந்தியடிகளின் 148-வது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தூய்மை என்பது துப்புரவுப் பணியாளர்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் மட்டுமே பொறுப்பானது அல்ல என்று கூறியுள்ளார்.

அசுத்தத்திற்கு எதிராக இந்தியா தூய்மையே சேவை இயக்கம் மூலம் போராடிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர், அகச்சுத்தம், புறச்சுத்தம், தூய்மையான சுற்றுப்புறம் ஆகியவற்றையே சுத்தத்தின் 3 பரிணாமங்களாக காந்தியடிகள் கருதியதாகவும் தெரிவித்திருக்கிறார்.