இந்தியா

”சீமான் மீது ஏன் நடவடிக்கை இல்லை?” - இந்தியில் பேச்சை பதிவிட்டு பிரசாந்த் கிஷோர் கேள்வி!

webteam

”சமூக ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் வெறுப்பை தூண்டும் வகையில் பரப்புரைகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரபல அரசியல் வியூக வித்தகர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை தாக்கிப் பேசுவது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ”தாம் ஆட்சிக்கு வந்தால், இந்தி பேசுவோர் மீது கஞ்சா பயன்படுத்துதல் உள்ளிட்ட போலி வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்து உணவு அளிக்க மாட்டேன் என சீமான் பேசியதாக அந்த வீடியோ உள்ளது. இதுபோல பொதுவெளியில் வெறுப்பு பரப்புரை செய்யும் சீமான் போன்றோர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை” என கிஷோர் கேள்வியெழுப்பியுள்ளார்.