நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈட்பட்டு வந்த நிலையில், இன்று தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தொடர்ந்து, பிரதமர் மோடியின் பரிந்துரையின் அடிப்படையில், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, கல்வி அமைச்சர் பதவியை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து பாஜகவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்தசூழலில் தான், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்த பிரகலாத் ஜோஷி-க்கு கல்வித்துறையை கூடுதலாக ஒதுக்கி தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.