இந்தியா

ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

webteam

ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இணைந்து படிப்பதற்கு ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான ஜெஇஇ மெயின் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி நடக்க இருந்தது.

அந்தத்தேர்வுகள் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.