இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மியா கலீஃபா ட்வீட்!

EllusamyKarthik

இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை மியா கலீஃபா ட்வீட் செய்துள்ளார்.

போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இணைய சேவை துண்டிப்பு, முள்வேலியினாலான தடுப்புகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில் பாடகி ரிஹான்னா, சூழலியலர் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தனர். அந்த வரிசையில் இப்போது மியா மியா கலீஃபாவும் இணைந்துள்ளார். 

“என்ன மாதிரியான மனித உரிமை மீறல் இது? புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது?” என மியா கலீஃபா ட்வீட் செய்துள்ளார்.