இந்தியா

மும்பையில் ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண் - துணிச்சலாக காப்பாற்றிய காவலர்

Sinekadhara

மும்பையில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண்ணை, காவலர் ஒருவர் கணநேரத்தில் காப்பாற்றிய சம்பவம் பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக மக்கள் காத்திருந்தனர். அப்போது ரயில் வரும் சமயத்தில் நடைமேடையில் இருந்த பெண் ஒருவர் தண்டவாளத்தை நோக்கி திடீரென குதித்துள்ளார். இதை கண்ட காவலர் ஒருவர், உடனடியாக கீழே குதித்து அந்தப் பெண்ணை தண்டவாளத்தில் இருந்து மறுபக்கம் இழுத்து காப்பாற்றியுள்ளார். ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.