இந்தியா

ஆகஸ்ட் 14 பிரிவினை அதிர்ச்சி நினைவு தினம் - பிரதமர் மோடி

Sinekadhara

நாடு பிரிவினையால் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவாக ஆகஸ்ட் 14இல் பிரிவினை அதிர்ச்சி நினைவு தினம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபோது பிரிவினையால் ஏற்பட்ட வலிகளை ஒருபோதும் மறக்க இயலாது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததுடன் வெறுப்பு வன்முறையால் ஏராளமானோர் உயிரிழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக ஆக்ஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.