இந்தியா

’’ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்’’ - நேதாஜிக்கு பிரதமர் மோடி மரியாதை

Sinekadhara

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளான இன்று அவருக்கு தான் மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன்; நமது தேசத்திற்கு நேதாஜி ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்’’ என ட்வீட் செய்திருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளான இன்று இந்தியா கேட்டில் அமைக்கப்பட்டுள்ள அவரது பிரம்மாண்ட கிரானைட் சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.