இந்தியா

பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட 2 கொரோனா மருத்துவமனைக்கு பிஎம் கேர்ஸ் நிதி ஒதுக்கீடு!

JustinDurai

பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து, பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா மருத்துவமனைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாட்னா மற்றும் முசாபாட்னாவின் பிடாவில் அமைக்கப்பட்ட 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் வென்டிலேட்டருடன் கூடிய 125 படுக்கை வசதி மற்றும் 375 சாதாரண படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு இருக்கும் என்றும் ஒவ்வொரு படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் வசதியும் அமைக்கப்பட்டு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும்  முசாபர்பூரில் விரைவில் கொரோனா மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.