இந்தியா

லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!!

webteam

லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீனப் படைகள் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் லடாக் பகுதிக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்துடன் லே பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு ஆய்வு செய்து வருகிறார். கல்வான் பகுதியில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்த வீரர்களைப் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லடாக்கில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் திடீர் லடாக் ஆய்வு எல்லைப்பகுதியில் பரபரப்பை உண்டா